மீ-டூவில் பெயர் குறிப்பிட்டதால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்- ஹரியானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

 

மீ-டூவில் பெயர் குறிப்பிட்டதால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்- ஹரியானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

2 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை தாக்கியதாகவும் அதனை தான் மறைத்து விட்டதாகவும் கூறி அந்த மாணவனின் பெயரை குறிப்பிட்டுள்ளார். 

ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்து வந்த 14 வயது பள்ளி மாணவன், தன் பெயரை அவரது அபார்ட்மென்ட்டில் இருக்கும் பெண் ஒருவர் மீ-டூவில் குறிப்பிட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது குறித்து பதிவிடும் ஹேஷ்டாக்கில் அந்த பெண், 2 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை தாக்கியதாகவும் அதனை தான் மறைத்து விட்டதாகவும் கூறி அந்த மாணவனின் பெயரை குறிப்பிட்டுள்ளார். 

ttn

இதனையறிந்த அந்த மாணவன் தன்னை போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்வார்கள் என்று எண்ணி பயந்து, 11 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ttn

மாணவன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மாணவனின் செல்போனை போலீசார் ஆராய்ந்து பார்த்ததில், மாணவனின் பெயரை அந்த பெண் மீ-டூவில் குறிப்பிட்டுள்ளதாக அவனது நண்பர்கள் ஸ்கிரீன் ஷாட் அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் போலீஸ் உன்னை வந்து விசாரணை செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர். அதற்கு பயந்து தான் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.