மீரா மிதுன் மீது காவல் துறை வழக்குப்பதிவு! விரைவில் கைது செய்யப்படுவாரா? 

 

மீரா மிதுன் மீது காவல் துறை வழக்குப்பதிவு! விரைவில் கைது செய்யப்படுவாரா? 

தொழிலதிபர் ஜோ மைக்கேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: தொழிலதிபர் ஜோ மைக்கேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3யில் 16வது போட்டியாளர்களாக நுழைந்து பிரபலமானவர் மீரா மிதுன். தொடர்ச்சியாக இவர் செய்த சில செயல் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையிலிருந்ததால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் இவர் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளிலிருந்தே தொழிலதிபர் ஜோ மைக்கேல் அவர் பல மோசடி செய்துள்ளதாகக் கூறி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த வந்தார். சமீபத்தில் மீரா மிதுன், ஜோவை ரகசியமாகக் கொலை செய்ய திட்டம் திட்டிய ஆடியோ பதிவு வெளியானது. அதனால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

meera

அதன் அடிப்படையில் மீரா மிதுன் ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். மேலும் அந்த விசாரணைக்குப் பிறகு மீரா மிதுன் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.