மீரா மிதுனுக்கு முத்தம் கொடுத்த மோகன் வைத்யா! பங்கமாகக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

 

மீரா மிதுனுக்கு முத்தம் கொடுத்த மோகன் வைத்யா! பங்கமாகக் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மிராமினுதுக்கு, மோகன்வைத்யா முத்தம் கொடுத்ததை நெட்டிசன்களை பங்கமாகக் கலாய்த்து வருகின்றனர். 

சென்னை: மிராமினுதுக்கு, மோகன்வைத்யா முத்தம் கொடுத்ததை நெட்டிசன்களை பங்கமாகக் கலாய்த்து வருகின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் தர்ஷன் மற்றும் சாக்சி விளையாடிய டாஸ்க்கிற்கு யாரும் உதவி செய்யக்கூடாது என்று விதி இருந்தும், விதியை மீறி மீராமிதுன் மறைமுகமாக அவர்களுக்கு உதவி செய்தார். இதை தட்டி கேட்ட கவினுக்கும், மீராவுக்கும் இடையே பிரச்சனை வந்தது. 

மீராவை கவின் ‘உனக்கு அறிவிருக்கா’ என்று கேட்க இந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு மீராவுக்கு அட்வைஸ் செய்தனர். அப்போது மோகன் வைத்யா சொல்ல வருவதைக் கொஞ்சம் கூட காதில் வாங்கி கொள்ளாத மீரா அவரை எதிர்த்துப் பேசினார். இதனால் கடுப்பான வைத்யா வயசுக்கு மரியாதை கொடு என்று அனைவர் மத்தியில் திட்டி தீர்த்து விட்டார். உடனே வழக்கம் போல் மீரா தன்னுடைய அழுகை நாடகத்தைத் தொடங்கினார். பின்பு அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் தர்ஷன் மீராவை கட்டிப்பிடித்துச் சமாதானப்படுத்தினார்.

meera

இந்த நிலையில் மோகன் வைத்யா, மீராவை ‘நீ எனக்கு மகள் போன்றவர், உன்னை நான் திட்டவே இல்லை, மகளாக நினைத்து அறிவுரை மட்டுமே கூறினேன்’ என்று சொல்லி திடீரென மீராவை கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்தார். இதை பக்கத்தில் இருந்து பார்த்த சாண்டி ‘என்ன நடக்கிறதது ‘இங்க என்ன நடக்கிறது என்பது போல்’ அதிர்ச்சி அடைந்தார். 

இந்த விவகாரத்தை வைத்து நெட்டிசன்கள் ‘மோகன் வைத்யா இதெல்லாம் ஓவர்’. முன்னதாக மீரா தனக்குக் கொக்கி மாட்டி விடும் படி கேட்டதற்கு, தனக்கு விருப்பம் இல்லை என்று வனிதாவிடம் அவர் குறையாகக் கூறினார். ஆனால் இப்போ மட்டும் முத்தம் கொடுக்க சங்கடமாக இல்லையா என்று நெட்டிசன்கள் இஷ்டத்திற்குக் கிண்டல் செய்து வருகின்றனர்.