மீம் கிரியேட்டர்கள் என்னிடம் தோற்றுவிட்டனர்- தமிழிசை பெருமிதம்

 

மீம் கிரியேட்டர்கள் என்னிடம் தோற்றுவிட்டனர்- தமிழிசை பெருமிதம்

எவ்வளவு தான் மீம் கிரியேட்டர்கள் என்னை கஷ்டப்படுத்த நினைத்தாலும் அதில் அவர்கள் தோற்றுப்போய்விட்டனர் என தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள தமிழிசை தெரிவித்துள்ளார். 

எவ்வளவு தான் மீம் கிரியேட்டர்கள் என்னை கஷ்டப்படுத்த நினைத்தாலும் அதில் அவர்கள் தோற்றுப்போய்விட்டனர் என தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள தமிழிசை தெரிவித்துள்ளார். 

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை சிட்டிசன் ஃபோரம் மற்றும் தமிழகம் ரிசச் பவுண்டேஷன் அமைப்புகள் சார்பில் தனியார் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “நான் குள்ளமாக இருப்பதை விமர்சித்தார்கள்; அதை கண்டு நான் வருத்தப்படவில்லை. எதிர்மறையை நேர்மறையாக செய்தால் வெற்றி நிச்சயம். பயணத்தை ரசித்துக் கொண்டே சென்றால் நாம் செல்ல வேண்டிய இலக்கு தானாக வந்துவிடும். எவ்வளவு தான் மீம் கிரியேட்டர்கள் என்னை கஷ்டப்படுத்த நினைத்தாலும் அதில் அவர்கள் தோற்றுப்போய்விட்டனர்.

Tamilisai

கண்டதை படித்தால் பண்டிதனாகலாம் என அப்பா சொல்லுவார் நான் கண்டதை படித்து ஆளுநர் ஆகியிருக்கிறேன். தந்தையை விலகி பயணிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அரசியலுக்கு பெண்கள் மற்றும் படித்தவர்கள் அதிகம் வரவேண்டும்.  மேதகு என்பதைவிட பாசமிகு என என்னை அழைப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி. 

மற்றவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு” என்று கூறினார்.