மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் 5 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சோகம்..!

 

மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் 5 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சோகம்..!

வழக்கமாக, விடுமுறைக் காலங்களிலோ அல்லது பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு ரெவின், அவனது வீட்டின் அருகேயுள்ள நண்பர்களுடன் விளையாடுவாராம்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டியில் டேவிட்- ஜெயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ரெவின் என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான். வழக்கமாக, விடுமுறைக் காலங்களிலோ அல்லது பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு ரெவின், அவனது வீட்டின் அருகேயுள்ள நண்பர்களுடன் விளையாடுவாராம். அவர்களின் வீட்டில் அருகே குடமுருட்டி என்னும் ஆறு உள்ளது. 5 நாட்களுக்கு முன்பு,  ரெவின் நண்பர்களுடன் இணைந்து குடமுருட்டி ஆற்றிற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். 

River

மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ரெவின் தவறி ஆற்றினுள் விழுந்துள்ளான். அதனைக் கண்டு பதறிப்போன  ரெவினின் நண்பர்கள் அவனது வீட்டிற்குத் தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து,  ரெவினின் குடும்பத்தினர் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தீயணைப்புத் துறையினரும்,  ரெவினை தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அன்று ஆற்றில் விழுந்த சிறுவனை மீட்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து, அந்த சிறுவனைத் தொடர்ந்து 5 நாட்களாகத் தீயணைப்புத் துறையினர் தேடியுள்ளனர்.

Renin

அதன் பின் இன்று, ரெவினின் உடல் வலப்பக்குடி அருகே கரை ஒதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்துள்ளனர். அங்குக் கிடந்த உடல்  ரெவினின் உடல் என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உடல் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.