மீனா? யானையா? மீனவர்களை கதிகலங்க வைத்த ராட்சத மீன்
Jun 30, 2019, 15:41 IST1561889511000
இலங்கை கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் மீனவரின் வலையில் மிகப்பெரிய மீன் சிக்கியது.
இலங்கை கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் மீனவரின் வலையில் மிகப்பெரிய மீன் சிக்கியது.
இரணைமாதா நகரில் வசிக்கும் மனோகரசீலன் என்பவரின் வலையில் ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட மீன் சிக்கியது. இரணை தீவு கடல்பரப்பில் இவ்வளவு எடை கொண்ட மீன் சிக்குவது இதுவே முதல்முறை என்கிறார்கள் மீனவர்கள். இந்த ராட்சத மீனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். சுமார் 4 டன் எடையுள்ள அந்த மீனை இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இது உண்பதற்கு உகந்தது இல்லை என தெரிவித்ததால் நடுக்கடலில் விடப்பட்டது.