மீனவர்களை மீட்டெடுத்து ஊருக்கு அனுப்பி வையுங்கள்.. முதல்வருக்கு நடிகர் பவன் கல்யாண் வேண்டுகோள்!

 

மீனவர்களை மீட்டெடுத்து ஊருக்கு அனுப்பி வையுங்கள்.. முதல்வருக்கு நடிகர் பவன் கல்யாண் வேண்டுகோள்!

இந்த அறிவிப்பால் மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். 

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பால் மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். 

ttn

இந்நிலையில் நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், “ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோம பேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்க தமிழக கடற்கரை எல்லைக்கு சென்ற சுமார் 99 மீனவர்கள் வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இதுகுறித்து செய்வதறியாது தவித்து வருகிறார்கள் ஜனதா தொண்டர்கள் மூலம் இந்த விடயத்தை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.  எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இந்த விடயம் தெரிந்த உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஸ்ரீகாகுளம் ஜில்லா கலெக்டர் அவர்கள் இது குறித்து மேற்கண்ட தகவலையும் அதன் 99 மீனவர்கள் பற்றின தகவல்களை அந்த கவலையுற்ற மீனவ குடும்பங்களுக்கு உடனே தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.