மீனவர்களை திசைத்திருப்ப தவறான  தகவல்களை பரப்பாதீர்கள் கமல்ஹாசன்! அமைச்சர் ஜெயக்குமார்

 

மீனவர்களை திசைத்திருப்ப தவறான  தகவல்களை பரப்பாதீர்கள் கமல்ஹாசன்! அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால், ஆண்டுதோறும் ஏப்.15 ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும். இதனால் மத்திய அரசு மீன்பிடிக்க அனுமதியளித்த நிலையிலும், மீன்பிடி தடை காலத்தினால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால், ஆண்டுதோறும் ஏப்.15 ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும். இதனால் மத்திய அரசு மீன்பிடிக்க அனுமதியளித்த நிலையிலும், மீன்பிடி தடை காலத்தினால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

fishermen-78

இந்நிலையில் சென்னைக்கு மிக அருகாமையில் வெளிநாட்டு கப்பல்கள் தமிழக எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்துதவிக்கும் தமிழக மீனவர்களுக்கு இது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று  பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?” என பதிவிட்டிருந்தார். 

kamalhassan

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மீன்வளத்துறை ஜெயக்குமார், “தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர். பன்னாட்டுக் கப்பல்கள் மீன்பிடிக்கவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களை திசைத்திருப்ப தவறான  தகவல்களை பரப்புகின்றனர். ஊரடங்கை காரணம் காட்டி காய்கறிகள், இறைச்சி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்யக்கூடாது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் கட்டுக்குள் தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.