மீண்டும் வடிவேலு – பார்த்திபன் காம்போ…உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

மீண்டும் வடிவேலு – பார்த்திபன் காம்போ…உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆனால், சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தாராம்.

எலி  படத்தில்  கடந்த 2015 ஆம் ஆண்டு நாயகனாக நடித்திருந்த நடிகர் வடிவேலு, அதன் பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் அவர் நடிக்க இருந்தார். இயக்குநர் ஷங்கரும் லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்காகப் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தாராம்.

ttn

இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் வரை செல்லவே இன்றுவரை தமிழ் சினிமாவில் தீர்க்கமுடியாத பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது வடிவேலு நடித்து பாதியில் நிற்கும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விவகாரம். இதனால் வடிவேலு வேறு எந்த படத்திலும் நடிக்காமலிருந்து வந்தார். 

ttn

இந்நிலையில் நடிகர் வடிவேலு நடிகரும் இயக்குநருமான  பார்த்திபனை சந்தித்துள்ளார். இதுகுறித்து புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், இன்றைய சந்திப்பு…நாளைய செய்தியாகலாம்! என்று பதிவிட்டுள்ளார்.  ஏற்கனவே வடிவேலு – பார்த்திபன் கூட்டணியில் உருவான காமெடி பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது  இந்த கூட்டணி மீண்டும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது இவர்களின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக வடிவேலு கமல் ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.