மீண்டும் முகனை சீண்டி அழ வைத்த அபிராமி! 

 

மீண்டும் முகனை சீண்டி அழ வைத்த அபிராமி! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3யில் கடந்த சில நாட்களாக முக்கோண காதல் கதையே ஒளிபரப்பானது. அதையடுத்து அது போர் அடிப்பதால் சற்று மாறுதலாக முகின்- அபிராமி காதல் கதையை ஒளிபரப்பானது. ஆனால் அபிராமி, முகினை dominate செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. 

அதை மேலும் பெரிதாகும் விதமாக வனிதா உள்ளே வந்து அவர்கள் இருவருக்கும் இடையே பற்றவைத்து சண்டையை ஊத்தி பெரிதாக்கினார். இதனால் முகின், அபிராமியை விட்டு சற்று தள்ளி இருந்தார். இந்த நிலையில்  இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீண்டும் இருவரும் சேர்ந்து பேசுவது போல் வெளியாகியுள்ளது. 

முகின், ‘என்னால் ஒரு பெண்ணுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று நினைக்கும் ஆள் நான். நேற்று கூட மது, நாங்கள் அனைவரும் உங்களை பயன்படுத்திக் கொள்கிறோம் சொல்றாங்க. நாங்க என்ன பண்ணோம்? தினமும் நான் அந்த வலியில் தான் இருக்கிறேன். அதை யாருகிட்டயும் காம்சிக்கல. நான் உன்னுடைய நட்பை எப்பவும் மிஸ் யூஸ் பண்ணல. அதை எப்பவும் மதிக்கிறேன். அந்த இடத்தில் நான் பேசத்ததற்கு காரணம். எனக்கு தோன்றவில்லை’ என்று அழுதுகொண்டே அவரிடம் நடந்ததைச் சொல்வது போல் முடிக்கப்பட்டுள்ளது.