மீண்டும் மிரட்டும் “MeToo”-தயாரிப்பாளர் தடவினார் -பிரபல நடிகை புகார்…  

 

மீண்டும் மிரட்டும் “MeToo”-தயாரிப்பாளர் தடவினார் -பிரபல நடிகை புகார்…  

#MeToo: தயாரிப்பாளர் அரிந்தம் சில் பாலியல் முறைகேடு செய்ததாக பெங்காலி தொலைக்காட்சி நட்சத்திரம் ரூபஞ்சனா மித்ரா குற்றம் சாட்டினார்; 

#MeToo: தயாரிப்பாளர் அரிந்தம் சில் பாலியல் முறைகேடு செய்ததாக பெங்காலி தொலைக்காட்சி நட்சத்திரம் ரூபஞ்சனா மித்ரா குற்றம் சாட்டினார்; 

rupanjana

ஏக் ஆகாஷர் நிச் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற ரூபஞ்சனா மித்ரா, திரைப்பட தயாரிப்பாளர் அரிந்தம் சில் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

sil

#MeToo இயக்கம் பொழுதுபோக்குத் துறையை இந்தியாவிலும், மேற்கிலும் புயல் போல  தாக்கியது. பல பெண்கள் தங்கள் பாலியல் முறைகேடு சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். சிலர் தைரியமாக  குற்றவாளிகள் மீது வழக்குகளைத் தாக்கல் செய்தனர். இப்போது,  சிண்டூர் கெலா, சோதி, மற்றும் ஏக் ஆகாஷர் நிச் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற பிரபல வங்காள தொலைக்காட்சி நடிகை ரூபஞ்சனா மித்ரா  பூமிகண்யா நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட்டை  வாசித்துக்கொண்டிருந்தபோது  பெங்காலி திரைப்படத் தயாரிப்பாளர் அரிந்தம் சில் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். . இருப்பினும், அவரது  குற்றச்சாட்டுகளை அரிந்தம் சில் மறுத்து

rupa

இது ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று அவர் கூறினார், மேலும் நாங்களிருவரும்  பழைய நண்பர்கள் என்றும் கூறினார்.

ஆனால் நடிகை இதுபற்றி “இது ஒரு பயங்கரமான அனுபவம், . அரிந்தம் என்னை தனது அலுவலகத்தில் சந்திக்கச் சொன்னார், எங்கள் இருவரையும் மட்டும் விட்டுவிட்டு அனைவரையும் வெளியே அனுப்பினார்  . அவர் என் தலையையும் பின்புறத்தையும் தொட ஆரம்பித்தபோது நான் நடுங்கினேன். . அவர் மேலும் கூறுகையில், ”  அது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது எனக்கு  நினைவிருக்கிறது,இப்போதுதான்   நான் தைரியமாக பேச ஆரம்பித்துள்ளேன் , என்றார் 

அவர் மேலும் ,தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் ‘இந்த விஷயத்தை பேசி  தீர்த்துக் கொள்ளுமாறு’ கேட்டதாகக் கூறுகிறார் . மக்கள் எதற்கும் பயப்படக்கூடாது, இல்லையெனில் இதுபோன்ற பிரச்சினைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.