மீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா!

 

மீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா!

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘குண்டு’ படத்தில் நடிகையாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார்.

சென்னை: பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘குண்டு’ படத்தில் நடிகையாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார்.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், அதன் சமூக கருத்தினாலும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சாதிய படுகொலையை மையமாக வைத்து உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்தப்படும் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

pariyerumperumal

இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அறிவிப்பு, அறிமுக இயக்குநர் ஆதிரை ஆதித்யா இயக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பா.ரஞ்சித்தின் அறிமுக நடிகரான ‘அட்டக்கத்தி’ தினேஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

அவரைத் தொடர்ந்து தற்போது, ‘பிக் பாஸ்’ டைட்டிலை வென்ற நடிகை ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களில் ரித்விகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகா நடிக்கவிருக்கும் முதல் திரைப்படம் ‘குண்டு’ என்பது குறிப்பிடத்தக்கது.