மீண்டும் டிரெண்டாகும் பெரிய மீசை கலாச்சாரம்: பெரிய மீசையை வளர்க்க அலவன்ஸை உயர்த்திய உ.பி காவல்துறை!

 

மீண்டும் டிரெண்டாகும் பெரிய மீசை கலாச்சாரம்: பெரிய மீசையை  வளர்க்க அலவன்ஸை உயர்த்திய உ.பி காவல்துறை!

மீசையை வளர்த்தெடுக்க போலீஸ்காரர்களுக்கு மீசை படியை ஐந்து மடங்கு உயர்த்த உத்தரபிரதேச காவல்துறை முடிவு செய்துள்ளது

லக்னோ: மீசையை வளர்த்தெடுக்க போலீஸ்காரர்களுக்கு மீசை படியை ஐந்து மடங்கு உயர்த்த உத்தரபிரதேச காவல்துறை முடிவு செய்துள்ளது.

மீசை என்பது ஆண்களின் கம்பீரமாகவே பார்க்கப்படுகிறது. சிலரை மீசையை  வைத்தே அடையாளம் சொல்லும் அளவிற்கு ஆண்களுக்கு மீசை என்பது வாழ்க்கையில்  ஒன்றிப் போயுள்ளது.மீசை வளர்ப்பதும் வளர்க்காமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், மீசை ஒருவரது ஆளுமையை அதிகரிக்கும். குறிப்பாக போலீஸ்காரரின் ஆளுமையை அது அதிகரித்துக் காட்டும் அதே போல சினிமாவை பொறுத்தவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிற போலீஸ் கேரக்டர்கள் எல்லாமே பெரிய மீசை வைத்திருக்கும். பழைய தங்கப் பதக்கம் படத்தில் இருந்து தற்போதைய  சிங்கம் வரை பெரிய மீசைதான் போலீஸ்காரர்களின் அடையாளம். 

 

singam

உத்தரபிரதேச காவல்துறை துறை, மீசையை வளர்த்தெடுக்க போலீஸ்காரர்களுக்கு மீசை படி வழங்கி வருகிறது. இந்த படியை, ரூ. 50-ல் இருந்து ரூ.250 ஆக மாற்ற இப்போது பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதுபற்றி உத்தரபிரதேச மாநில போலீஸ் ஏடிஜி பினோத் குமார் சிங் கூறும்போது, ‘முன் காலத்தில் போலீஸ் என்றால் பெரிய பெரிய மீசை வைத்திருப்பார்கள். இப்போது அந்தப் பழக்கம் குறைந்துவிட்டது. இருந்தாலும் சிலர் பெரிய மீசை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பழைய ஸ்டைலை பின்பற்ற வேண்டும் என்று மீசை படியாக, ரூ.50 வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதை மாற்றி ரூ.250 உயர்த்தித் தர உள்ளோம். அதோடு மீசையையும் கம்பீரமாக வளர்க்க ஆலோசனையும் கூறியுள்ளோம்’ என்றார்.