மீண்டும் ஜோதிகாவுடன் இணையும் சூர்யா?: சூர்யாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார்.
சென்னை: ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்ஜிகே. இப்படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ளார். இதில் நடிகை சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் சூர்யா நேற்று மாலை டிவிட்டரில் உரையாடினார். அப்போது அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் குறிப்பாக நீங்கள் மீண்டும் ஜோவுடன் நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கதை கேட்டு வருகிறோம். விரைவில் இருவரும் திரையில் இணைவோம் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தனது குழந்தைகளுக்குத் தான் நடித்த படங்களிலேயே சிங்கம், 24, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் தான் மிகவும் பிடித்தது’ என்றார்.