மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஜெயலலிதா சிலை! – இம்முறை மாமண்டூரில்
அதிமுகவின் 47-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி மாமண்டூரில் அக்கட்சியினர் ஜெயலலிதாவிற்கு சிலை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம்: அதிமுகவின் 47-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி மாமண்டூரில் அக்கட்சியினர் ஜெயலலிதாவிற்கு சிலை வைத்துள்ளனர்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரின் சிலை பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக அதிமுக தொண்டர்களே ஜெயலலிதா சிலையைப் பார்த்து முகம் சுழிக்கும் அளவிற்கு தான் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
சிலைக்கும் அதிமுகவுக்கும் என்னதான் பிரச்னையோ !
ஏற்கனவே தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையிலேயே பல விமர்சனம்
இப்போ புதுசா மாமண்டூரில் வைக்கப்பட்டுள்ள சிலையும் … @AIADMKOfficial @CMOTamilNadu @OfficeOfOPS #jayalalithaa pic.twitter.com/SPEjnsLgOX
— Vignesh Theni (@Vignesh_twitz) October 17, 2018
இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூரில் அதிமுக தலைமை அலுவலகம் போல் செட்டப் செய்து, அதன் முன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை அதிமுகவினர் திறந்து வைத்துள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை போலவே அந்த சிலைகளும் காட்சி தருவதால், நெட்டிசன்கள் மீண்டும் வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.