மீண்டும் கேட்டில் வைத்து பேட்டி… ஸ்டாலினை நோஸ் கட் செய்த ரஜினி! 

 

மீண்டும் கேட்டில் வைத்து பேட்டி… ஸ்டாலினை நோஸ் கட் செய்த ரஜினி! 

நேற்று நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் வைத்து பேட்டி அளிப்பார் என்று நிருபர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அங்கு கேட்டி அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார். ஆனால், தன்னுடைய வீட்டு கேட் முன்பாக அவர் பேட்டி அளித்தார்.

விமானநிலையத்தில் பேட்டி அளிக்காமல் வீட்டு கேட் முன்பு பேட்டி அளித்திருப்பதன் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு நோஸ் கட் செய்திருப்பதாக ரஜினி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் வைத்து பேட்டி அளிப்பார் என்று நிருபர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அங்கு பேட்டி அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார். ஆனால், தன்னுடைய வீட்டு கேட் முன்பாக அவர் பேட்டி அளித்தார். அப்போதுதான் கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு கண்டனம் என்று நீண்ட பேட்டியை அளித்தார்.

ரஜினிகாந்த் கேட் வாசலில் வைத்து பேட்டி அளிப்பது வழக்கமாக உள்ளது. இதை சில தினங்களுக்கு முன்பு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். ஆனால் ரஜினி நிருபர்களுக்கு இன்னும் உரிய மரியாதை அளிக்கவில்லை. மீண்டும் வாசலில் நிறுத்தியே பேட்டி அளித்துள்ளார். இதை அவரது தொண்டர்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பதிலடியை ரஜினி கொடுத்துவிட்டதாக கருத்திட்டு மகிழ்ந்து வருகின்றனர்.