மீண்டும் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்

 

மீண்டும் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்

கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு பட இயக்குநர்  கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் நடித்து வந்தார்

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் கிருஷ்ண வம்சியுடன் மீண்டும் இணையவுள்ளார். 

நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 1983ஆம் ஆண்டு  வெள்ளை மனசு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ramya

அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி  முத்திரை பதித்தார். இதையடுத்து கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு பட இயக்குநர்  கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக அவர் ஏற்று நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரி, பாகுபலி படத்தில் சிவகாமி தேவி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ramya

இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து ரம்யா கிருஷ்ணன் மீண்டும் வெள்ளித்திரையில் கணவருடன் இணையவுள்ளார். ஆம். கிருஷ்ண வம்சி இயக்கம் புதிய படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார், இந்த அப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ramya

ஏற்கனவே  கணவர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன், 1998 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்திலும் , 2004 ஆம் ஆண்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் என்ற படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.