மீண்டும் ஒரு மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்; கொண்டாடும் ரசிகர்கள் !!

 

மீண்டும் ஒரு மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்; கொண்டாடும் ரசிகர்கள் !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதன் மூலம் நடப்பு தொடரின் ப்ளே ஆஃப் சுற்றிற்கும் தகுதி பெற்றுள்ளது. 
முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

ன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றிற்கும் முன்னேறியுள்ளது.ஐ.பி.எல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. 

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு மணிஷ் பாண்டே 83* ரன்களும், டேவிட் வார்னர் 57 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய செனனை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேன் வாட்சன் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 38 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் எப்பொழுதும் கடைசி ஓவரின் கடைசி பந்திலேயே வெற்றி பெற்று பழகிய இந்த போட்டியையும் 19வது ஓவரின் 5வது பந்திலேயே இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஹைதராபாத் அணியுடனான இந்த வெற்றியின் மூலம், நடப்பு தொடரில் 8வது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதன் மூலம் நடப்பு தொடரின் ப்ளே ஆஃப் சுற்றிற்கும் தகுதி பெற்றுள்ளது. 
முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.