மீண்டும் உருவாகிறது விஷால்- மிஷ்கின் கூட்டணி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

மீண்டும் உருவாகிறது விஷால்- மிஷ்கின் கூட்டணி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால்- மிஷ்கின் கூட்டணியில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  துப்பறிவதைக் களமாகக் கொண்ட கிரைம் த்ரில்லராக அமைந்த இப்படத்தில் விஷாலுடன் வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா, சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

vishal

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக துருக்கியில் நடக்கும் சுந்தர்.சி படத்தின் ஷூட்டிங்கிற்கு, சென்ற இயக்குநர் மிஷ்கின் விஷாலை சந்தித்து கதை கூறினார். இதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிஷ்கின் தான் இயக்கிய எந்த படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்காத நிலையில், இப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: பிரச்சனை முடிந்தது: லாரண்ஸ்-யிடம் வருத்தம் தெரிவித்த சீமான்