மீண்டும் உயர்ந்தது தங்க விலை !

 

மீண்டும் உயர்ந்தது தங்க விலை !

தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, கடந்த செப்டம்பர் மாத உச்சத்தை வீழ்த்தி புதிய உச்சத்தை அடைந்தது.

இந்த மாத தொடக்கம் முதல் ரூ.29 ஆயிரத்திற்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கடந்த 3 ஆம் தேதி அதிரடியாக உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர், தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, கடந்த செப்டம்பர் மாத உச்சத்தை வீழ்த்தி புதிய உச்சத்தை அடைந்தது. அதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக குறைந்த தங்க விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,820க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.30,560க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.60க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,600க்கு விற்கப்படுகிறது.