மீண்டும் இணையுள்ள வெற்றி கூட்டணி: அனுராக் கஷ்யப்பின் புதிய படத்தின் அறிவிப்பு 

 

மீண்டும் இணையுள்ள வெற்றி கூட்டணி: அனுராக் கஷ்யப்பின் புதிய படத்தின் அறிவிப்பு 

இந்தியில்  வெற்றி படங்களை இயக்கிய அனுராக் கஷ்யப்புடன்  நடிகை டாப்ஸி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். 

சென்னை: இந்தியில்  வெற்றி படங்களை இயக்கிய அனுராக் கஷ்யப்புடன்  நடிகை டாப்ஸி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். 

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலம் அடைந்தவர் நடிகை டாப்ஸி பண்ணு. இவர் தமிழில் வந்தான் வென்றான், வை ராஜா வை ,ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அப்படங்கள் எதுவும் இவருக்கு கை கொடுக்காமல் போனதால் பாலிவுட் சென்ற இவர்  பிங்க்,சூர்மா,மான்மறிஜியான் போன்ற படங்களில்  நடித்து ரசிகர்களால்  கவனிக்கப்பட்டார். 

game over

இந்நிலையில் நயன்தாராவை வைத்து மாயா என்ற படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனிடம் கதை கேட்ட டாப்ஸி  இவர் இயக்கும் அடுத்த படத்திற்கு ஓகே சொல்லியுள்ளார் .Y நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் டாப்ஸி மாற்றுத்திறனாளியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘கேம் ஓவர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது.இதில் இந்தி வெர்சனை மட்டும் அனுராக் கஷ்யப் இயக்கவுள்ளார் . கூடிய விரைவில் இப்படம் எல்லா மொழிகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது . முன்னதாக அனுராக் கஷ்யப்பும் – டாப்ஸியும் இணைந்து ஏற்கனவே மான்மறிஜியான் படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .