மீண்டும் இணையும் சிங்கம் காம்போ?

 

மீண்டும் இணையும் சிங்கம் காம்போ?

‘சிங்கம்’ பட சீரிஸை தொடர்ந்து இயக்குநர் ஹரி மற்றும் சூர்யா மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ‘சிங்கம்’ பட சீரிஸை தொடர்ந்து இயக்குநர் ஹரி மற்றும் சூர்யா மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி-சூர்யா கூட்டணியில் வெளியான ‘வேலு’, ‘ஆறு’, ‘சிங்கம் 1, 2, 3’ ஆகிய திரைப்படம் அதிரடி ஹிட் படங்களாக அமைந்தன. இதைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது கட்டாயம் சிங்கம் படத்தின் வரிசை இல்லை எனவும் கூறப்படுகிறது.

முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ‘சூர்யா 37’, ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூர்யா 38’ ஆகிய வரிசையில் ‘சூர்யா 39’வது படமாக ஹரி இயக்கும் திரைப்படம் அமையும் என கூறப்படுகிறது.