மீடூ மூலம் பணம் பறிக்க நினைக்கிறார் சின்மயி: நடிகர் ராதாரவி பகீர் புகார்!

 

மீடூ மூலம் பணம் பறிக்க நினைக்கிறார் சின்மயி: நடிகர் ராதாரவி பகீர் புகார்!

பிறந்த குழந்தையாக இருந்தபோதே மீடூ நடந்ததாக சின்மயி புகார் கொடுக்கட்டும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

சென்னை: பிறந்த குழந்தையாக இருந்தபோதே மீடூ நடந்ததாக சின்மயி புகார் கொடுக்கட்டும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

சினிமா டப்பிங் சங்கத்தில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ள சின்மயி, ‘இரண்டு ஆண்டுகளாகச் சந்தா கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி நீக்கியுள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.5 லட்சம் சந்தா கேட்கின்றனர். ஆட்களுக்கு ஏற்றாற்போல் உறுப்பினர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என்று  குற்றம் சாட்டினார்.  தான் மீடூ குறித்து பேசியதன் விளைவால் தான்   டப்பிங் சங்கத்தில் இருந்து தான் நீக்கப்பட்டுளேன்.இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும்  அவர் கூறினார்.

இந்நிலையில் நடிகரும் டப்பிங் யூனியனின் தலைவருமான ராதா ரவி, ‘அவங்க தான் கோர்ட்டுக்கு போறேன் என்று சொல்லிருக்கிறார்களே.. கோர்ட்டில் பார்ப்போம் என்று  கூறி சுருக்கமாக அந்த விஷயத்தை முடிக்க இயலும். ஆனால் சின்மயி வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் மீது குற்றச்சாட்டை வைத்து, பிளாக் மெயில் செய்து பார்த்தார். அங்கு ஒண்ணும் முடியல. உடனே அவர் டப்பிங் சங்கம் பக்கம் திரும்பியுள்ளார். சின்மயி முருகா என்று கூறினால் கூட, மீடூ தான் நினைவிற்கு வருகிறது. சின்மயியை நாங்கள் நீக்கவில்லை. அவரை நீக்கியது நீதிபதி வாசுகியம்மாள். அவர்தான் தேர்தல் ஆணையர். 2 வருட சந்தா கட்டவில்லை என நீக்கினார். அதேபோல் நீக்கிய பிறகு சின்மயி டப்பிங் சங்கம் குறித்து பேசக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

‘அவர் எத்தனை பேர் மீது வேண்டுமானாலும் மீ டூ புகார் கொடுக்கட்டும். 20 வருடங்களுக்கு முன் கூட மீ டூ நடந்ததாககொடுக்கட்டும், ஏன் பிறந்த குழந்தையாக இருந்தபோதே மீ டூ நடந்ததாகப் புகார் கொடுக்கட்டும். அதில் என்ன இருக்கு. சின்மயி யார் யாரைக்கூறி பணம் பெற நினைக்கிறாரோ அவர்களின் பெயரை எல்லாம் கொடுக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.