மிஸ்டர் லோக்கல்: பரிசு கொடுத்து பிரிந்த நயன்தாரா! 

 

மிஸ்டர் லோக்கல்: பரிசு கொடுத்து பிரிந்த நயன்தாரா! 

நடிகை நயன்தாரா மிஸ்டர் லோக்கல் திரைப்பட குழுவுக்குக் கடிகாரம் பரிசளித்திருப்பது படக்குழுவினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: நடிகை நயன்தாரா மிஸ்டர் லோக்கல் திரைப்பட குழுவுக்குக் கடிகாரம் பரிசளித்திருப்பது படக்குழுவினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல்.கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா நடித்துள்ளார். காமெடி என்டேர்டைன்மெண்டாக உருவாகிவரும் இப்படத்தில்  யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

nayanthara

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், வெளி நாடுகளிலும் படமாக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் கிட்டதட்ட முடிந்துவிட்டது.

 இந்நிலையில் இதில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் கடந்த 6-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த நயன்தாரா படக் குழுவினருக்கு அனைவருக்கும் நன்றி கூறியதோடு மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கடிகாரம் பரிசளித்தார். பிறகு படக்குழுவுடன் கேக் வெட்டி அனைவரும் கொண்டாடினர். 

மேலும் இயக்குநர் எம்.ராஜேஷ், சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாகக் கூட்டணி அமைத்திருப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.