மிரண்டு போன பாமக தலைவர்… லேண்ட்லைனில் வந்த அதிர்ச்சி..!

 

மிரண்டு போன பாமக தலைவர்… லேண்ட்லைனில் வந்த அதிர்ச்சி..!

ஒரு பெரிய கட்சியோட மாநிலத் தலைவர் பேரைக் கூட தெரியாமலா ஆஸ்பத்திரியின் நிர்வாக பிரிவில் இருப்பார்கள்? என்று மணி உயரதிகாரியிடம் சலித்துக் கொண்டுள்ளார்.

சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு லேண்ட் லைன் போனில் வரும் சிபாரிசுகளுக்கு பஞ்சமே இல்லை. இப்படி சிபாரிசு செய்த பாமக  தலைவர் ஜி.கே.மணியை யாரென்று தெரியாமல் ஊழியர்கள் கலாய்த்ததுதான் இப்போது ஹாட் டாபிக். 

தொண்டர் ஒருவரை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி ஆஸ்பத்திரியின் லேண்ட் லைனுக்கு போன் போட்டாராம் ஜி.கே.மணி. அவரது பெயரை சொல்லி பேசியபோது போனை எடுத்தவர், நீங்கள் யாரென்றே தெரியாது என்று கூறி, கலாய்த்து மிரள வைத்தாராம். இருந்தாலும் தலைவர் விடவில்லை. தொடர்ந்து லேண்ட் லைனுக்கே போன் போட்டுள்ளார்.

g.k.Mani

அடுத்தடுத்து எடுத்த ஊழியர்களும் இதையே கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஊழியர்கள், உயரதிகாரியிடம் விஷயத்தை சொல்லி இருக்கின்றனர். அவர் சுதாரித்துக் கொண்டு பேசியதில் எதிர் முனையில் இருப்பவர் பாமக தலைவர் என்பதை உறுதி செய்து கொண்டார்.

 ஒரு பெரிய கட்சியோட மாநிலத் தலைவர் பேரைக் கூட தெரியாமலா ஆஸ்பத்திரியின் நிர்வாக பிரிவில் இருப்பார்கள்? என்று மணி உயரதிகாரியிடம் சலித்துக் கொண்டுள்ளார். பிறகு நீங்கள் சிபாரிசு செய்த தொண்டரை நன்றாக கவனித்துக் கொள்வதாக கூறி, ஜி.கே.மணியை சாந்தப்படுத்தியுள்ளார் உயரதிகாரி.