மிரட்டும் கொரோனா : இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் பலி!
கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை வரும் 31 ஆம் தேதி மூடவைக்கக்கோரி அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 173 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை வரும் 31 ஆம் தேதி மூடவைக்கக்கோரி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 613 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரத்து 261 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இத்தாலியில் 5 ஆயிரத்து 476 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. இங்கு கணிசமான அளவு முதியவர்களே பாதிக்கப்படுகின்றனர்.