மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்…!

 

மின் கோபுரம் மீது ஏறி  தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்…!

பெண்ணை திருமணம் செய்து கொண்டார். குடிக்கு அடிமையான ஜீவா, தொடர்ந்து மனைவி மகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

சிவகங்கை ஒக்கூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜீவா. இவர் கடந்த ஆண்டு கணவனை இழந்து பெண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். குடிக்கு அடிமையான ஜீவா, தொடர்ந்து மனைவி மகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று வழக்கம்போல குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்ய அக்கம் பக்கத்தினர் தட்டிக்கேட்டுள்ளனர். அதனால் இவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.  பின்னர் அங்கிருந்து போதையில் வந்த ஜீவா மின் கோபுரத்தின் மீது ஏறிக்கொண்டு தன்னை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறி மிரட்டல் விடுத்தார்.

rrr

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஜீவாவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர் கீழே இறங்குவதாக இல்லை. ஒருபுறம் அவரின் மனைவி மற்றும் மகள் கதறி அழுதனர். இதன்பின்னர் மாலை நேரம் செல்ல செல்ல தீயணைப்பு வீரர்கள் லாவகமாக ஏறி ஜீவாவை மீட்டனர்.இதையடுத்து வட்டாட்சியர் உத்தரவின் பேரில் குடிமகன் ஜீவாவுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.