மின்வேலியில் சிக்கிய வீட்டு நாயை காப்பாற்ற முயன்ற விவசாயி பலி

 

மின்வேலியில் சிக்கிய வீட்டு நாயை காப்பாற்ற முயன்ற விவசாயி பலி

மின் வேலியில் சிக்கிய நாயை காப்பாற்ற சென்ற விவசாயி பலியானார்.

ஈரோடு: மின் வேலியில் சிக்கிய நாயை காப்பாற்ற சென்ற விவசாயி பலியானார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகரணை பகுதியை சேர்ந்தவர் மும்மூர்த்தி (55). விவசாயி. இவருடைய மனைவி பிரகதீஸ்வரி. இவர்களுக்கு பவித்ரா என்ற மகளும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.

தான் வளர்த்து வரும் ஒரு நாயை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மும்மூர்த்தி சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தோட்டத்தில் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மின்வேலியில் மும்மூர்த்தியின் நாய் எதிர்பாராதவிதமாக சிக்கியதால் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியது.

இதைப்பார்த்த மும்மூர்த்தி, நாயை காப்பாற்ற முயன்றார். அப்போது மும்மூர்த்தியையும் மின்சாரம் தாக்கியது. இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே மும்மூர்த்தி பலியானார். நாயும் இறந்து விட்டது.