மின்னல் தாக்கி 32 பேர் பரிதாப பலி : அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

மின்னல் தாக்கி 32 பேர் பரிதாப பலி : அதிர்ச்சி தரும் சம்பவம்!

உத்தரப்பிரதேசம்: மின்னல் தாக்கி உயிரிழந்த 32 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம்: மின்னல் தாக்கி உயிரிழந்த 32 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

lighting

பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அசாமின் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட், திப்ருகார், சிவசாகர் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

lighting

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 4 நாட்களில் மின்னல் தாக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். அம்பேத்கர் நகரில் கடந்த 18ஆம் தேதி மின்னல் தாக்கியதில் ஒருவரும், 19ஆம் தேதி குஷிநகர், டியோரியா ஆகிய இடங்களில் இருவரும் பலியாகியுள்ளனர். இதேபோல் 20ஆம் தேதி இருவரும், நேற்று கான்பூர் மற்று ஃபதெபூரில் எழுவரும், ஜான்சியில் ஐவரும், ஜலாவுனில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.இதை தொடர்ந்து ஹமிர்பூர், காளிப்பூர், ஜவுன்பூர், பிரதாப்கார், கான்பூர் தெஹாட் மற்றும் சித்ராகூட் உள்ளிட்ட பகுதிகளிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி மின்னல் தாக்கி மட்டும் 32 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.