மின்சாரம் சென்றால்தான் சென்னைக்கு செல்வேன்: விஜயபாஸ்கர் சபதம்

 

மின்சாரம் சென்றால்தான் சென்னைக்கு செல்வேன்: விஜயபாஸ்கர் சபதம்

புதுக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முழுவதும் மின்சாரம் சென்றால்தான் நான் சென்னை செல்வேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முழுவதும் மின்சாரம் சென்றால்தான் நான் சென்னை செல்வேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளர்.

கஜா புயல் புதுக்கோட்டையை பலமாக தாக்கியது. இதனால் அங்கு ஏராளமான மின்சார கம்பங்கள் சாய்ந்துள்ளன. புதுக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்களும், உள் கிராமங்களும் இருப்பதால் அங்கு நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டையில் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

புதுக்கோட்டைமாவட்டம் விரைவில் காரணம், அரசு மற்றும் அரசுடன் இணைந்து பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பணியாற்றியது. முதலில் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை கூறினால் அதை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுதான் ஒரு அரசின் கடமை. இல்லையென்றால், சொந்த முயற்சியிலாவது அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் அதை மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டும்.

இப்படித்தான் நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகளை செய்து வருகிறேன். அதனால்தான் என் வாகனத்தை யாருமே மறிக்கவில்லை. மாவட்டத்தில் 95%மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு விரைவில் வந்துவிடும். அப்படி கிராமங்களுக்கு முழுவதும் மின் இணைப்பு சென்ற பிறகுதான் நான் சென்னைக்கு செல்வேன் என்றார்.