மிகவும் ஆபத்தான பட்டியலில் உள்ள  7வங்கிகள்! உங்கள் வங்கி இருக்குதா? 

 

மிகவும் ஆபத்தான பட்டியலில் உள்ள  7வங்கிகள்! உங்கள் வங்கி இருக்குதா? 

உலகில் மிகவும் படுமோசமாக இயங்கும் முதல் 10 வங்கிகளின் பட்டியலில் 7 இந்திய வங்கிகள் இருப்பது புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளது. 

உலகில் மிகவும் படுமோசமாக இயங்கும் முதல் 10 வங்கிகளின் பட்டியலில் 7 இந்திய வங்கிகள் இருப்பது புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளது. 

வாராக் கடன் காரணமாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் எஸ்வங்கியை ரிவர்வ் வங்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. சமீப காலமாக வங்கிகள் திவாலாகும் நிலைக்கு செல்வதும், அதை தடுக்க ரிவர்வ் வங்கி நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது.ரிவர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலமாக இனி யெஸ் வங்கி எந்த முதலீடு தொடர்பான நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது. அடுத்த 30 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், “யெஸ் ஃபேங்க் இல்லை… பிரதமர் மோடியும் அவரது கொள்கைகளும் இந்தியாவின் பொருளாதாரத்தை குலைத்துவிட்டன. நோ பேங்க்” என்று குறிப்பிட்டுள்ளார்.

yes bank

இந்தியாவில் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஐடி துறைகள் ஏற்கனவே பாதிப்புகளைச் சந்தித்துவரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் அதளபாதளத்திற்கு சென்றுள்ளது. இந்திய வங்கிகளின் பட்டியலில் யெஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி, செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா, ஆர்பிஎல் பாங்க் லிமிடெட், இந்தியா ஓவர்சீஸ் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியெண்டல் பாங்க் ஆப் காமெர்ஸ் உள்ளிட்ட வங்கிகல் இடம்பெற்றுள்ளன.