மாஸ் நடிகரை குறிவைப்பது சரியல்ல: சர்கார் விஜய்க்கு பறிந்துப்பேசிய பிக் பாஸ் காயத்ரி!
தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகரை தொடர்ச்சியாக குறிவைப்பது சரியல்ல என பிக் பாஸ் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகரை தொடர்ச்சியாக குறிவைப்பது சரியல்ல என பிக் பாஸ் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளை கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், வில்லியாக நடித்துள்ள வரலக்ஷ்மியின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவள்ளி என்ற பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக–வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்த நிலையில், குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதாக சர்கார் படக்குழு ஒப்புக் கொண்டது. இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு பிற்பகலில் இருந்து காட்சிகள் திரையிடப்படுகிறது.
Back to back problem given and trying to ban a film of particular actor who is the real mass in the industry state is not right. Just watch the movie as movie. No need to create an issue after censorship. #SARKAR is a movie. If think it’s his political aspiration nothin wrong.
— Gayathri Raguramm (@gayathriraguram) November 9, 2018
இந்நிலையில், இது குறித்து பிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக உள்ள நடிகரை தொடர்ந்து குறிவைப்பது சரியல்ல. திரைப்படத்தை படமாக பாருங்கள். தணிக்கை செய்யப்பட்ட பிறகு பிரச்னை செய்வது தேவையில்லாதது. சர்கார் ஒரு படம். ஒருவேளை அது விஜய்யின் அரசியல் ஆசையாக இருந்தாலும் அதில் தவறில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.