மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை கூட்டம் நிறைவு : வைரல் போட்டோஸ்!
முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.
ரஜினி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.
2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.
இந்நிலையில் ரஜினி தலைமையில் இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது . இதற்காக மாவட்டச் செயலாளர்கள் 38 பேர் சென்னைக்கு புறப்பட்டு வருமாறு தொலைப்பேசியில் அழைக்கப்பட்டனர்.
இதன் காரணமாக காலை முதலே ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ரஜினி, கட்சி தொடங்குவது எப்போது? கட்சி கொடி என பல விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.
மேலும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக நடந்த இந்த கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.