“மாவட்ட கலெக்டருக்கு நன்றி”..3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம் !

 

“மாவட்ட கலெக்டருக்கு நன்றி”..3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம் !

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சிக்கினாபுரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருபவர் தரணேஷ்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சிக்கினாபுரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருபவர் தரணேஷ். இவர் அவரது நண்பர்களுடன் இனைந்து திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “நானும் என் நண்பர்களும் நடந்து தான் பள்ளிக்குச் செல்வோம். மழைக்காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம். எங்கள் வீட்டுக்கும் பள்ளிக்கும் 10கி.மீ தூரம். அதனால் பேருந்து வசதி கேட்டு எங்கள் ஊர் அண்ணாக்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டனர். உங்கள் உத்தரவின் பேரில் இன்னும் 10 நாட்களில் பணிமனை மேளாலர் தாராபுரம் பேருந்து வசதி ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். இது எங்களுக்குச் சந்தோஷம் அளிக்கிறது. 

 

இதற்காக என் சார்பாகவும் எங்கள் பள்ளி சார்பாகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முடிந்தால் பேருந்தில் திறப்பு விழாவிற்கு நீங்களும் வாருங்கள். தங்களைக் காணும் நாளை எதிர்நோக்கி நானும் என் நண்பர்களும் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று எழுதியுள்ளார். இதனைக் கண்ட திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன்  அவரது ட்விட்டர் பக்கத்தில், “சிக்கினாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் தரணேஷ் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!” என்று பதிவிட்டு அந்த கடிதத்தையும் பகிர்ந்துள்ளார். நிறைவேறப்போகும் கோரிக்கைக்காக கலெக்டருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.