மாற்றுத்திறனாளி நண்பனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த இளைஞர் பரிதாப பலி!

 

மாற்றுத்திறனாளி நண்பனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த இளைஞர் பரிதாப பலி!

ராமநாதபுரம் மாவட்டம் கண்ணிராஜபுரத்தை சேர்ந்தவர்கள் மாரிமுத்து மற்றும் அந்தோணி. இவர்கள் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கண்ணிராஜபுரத்தை சேர்ந்தவர்கள் மாரிமுத்து மற்றும் அந்தோணி. இவர்கள் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று இவர்கள் இரண்டு பேரும் ஊர்மக்களுடன் சேர்ந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர். இதில் மாரிமுத்து மாற்றுத்திறனாளி என்பதால் அவர் மூன்று சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பாதயாத்திரை சென்ற அனைவரும் சிறிது இளைப்பாறுவதற்காகத் தாமிரபரணி ஆற்றின் தென்புற படித்துறை அருகே குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மாரிமுத்து ஆற்றில் விழுந்துள்ளார். 

ttn

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தோணி, மாரிமுத்துவை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பின் மாரிமுத்துவை கரை சேர்த்த அந்தோணி, திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் ஆற்றில் குதித்து அந்தோணியைத் தேடியுள்ளனர். ஆனால், அவரது உடல் கிடைக்கவில்லை என்பதால் ஆத்தூர் காவல் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், அந்தோணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். நீரில் மூழ்கிய மாரிமுத்துவும் உடல் நலக்குறைவால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நண்பனைக் காப்பாற்றச் சென்ற இளைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.