மார்ச்-8 மகளிர்தின ஸ்பெஷல்… பெண்களுக்கென்று தனி பார் வசதி வருகிறது..!
இந்தியாவிலேயே முதல் முறையாக மகளீர் மட்டும் ஒயின் ஷாப்புகள் வரப்போகின்றன.யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்,சம்பவம் நடக்க இருப்பது பெங்களூரில்.வரும் மார்ச் 8-ம் தேதி மகளீர்தினம் வருவதால் அன்றுதான் முதல் மகளீர் மட்டும் பார் பெங்களூரில் இருக்கும்
மகளிர் மட்டும்,பேருந்து,ரயில் பெட்டி,துணிக்கடை,காவல் நிலையம் எல்லாம் பார்த்துவிட்டோம். இந்தியாவிலேயே முதல் முறையாக மகளீர் மட்டும் ஒயின் ஷாப்புகள் வரப்போகின்றன.யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்,சம்பவம் நடக்க இருப்பது பெங்களூரில்.
வரும் மார்ச் 8-ம் தேதி மகளீர்தினம் வருவதால் அன்றுதான் முதல் மகளீர் மட்டும் பார் பெங்களூரில் இருக்கும் பிரிகேட் சாலையில் 2500 சதுர அடிப் பரப்பளவில் அமைய இருக்கிறது.இந்த ஒயின் ஷாப்புக்கு ‘ மிட் அண்ட் மிஸ் பார் அண்ட் ரெஸ்டாரெண்ட்’ என்று பெயரிடப் போகிறார்கள்.இது வெறும் பார் மட்டுமல்ல அத்துடன் இணைந்த உணவமாகவும் செயல்படும். இந்த பார் கம் ரெஸ்டாரெண்டில் குடிப்பவர்கள் மட்டுமல்ல,பார் பணியாளர்கள், சமையல் செய்பவர்கள், பார் உரிமையாளர்களோடு,ஓவராய் குடித்து கலாட்டா செய்தால் தூக்கி வெளியே போடும் பவுன்சர்களாகவும் பெண்களே இருப்பார்கள்.
தினமும் நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்படும் மிஸ் அண்ட் மிஸ் பார்கள் நள்ளிரவு ஒரு மணிவரை வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்குமாம். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இதுபோன்ற உணவகத்துடன் இணைந்த பார்கள் நகரெங்கும் திறக்கப்படும் என்கிறார் , பிரிகேட் சாலை மிஸ் அண்ட் மிஸ் பார் அண்ட் ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் பஞ்சூரி சங்கர்.