மார்ச் 14- 20 ஆம் தேதி வரை தமிழகத்துக்கு வந்த ரயில்களில் பயணம் செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 

மார்ச் 14- 20 ஆம் தேதி வரை தமிழகத்துக்கு வந்த ரயில்களில் பயணம் செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மாநாட்டில் கலந்து கொண்ட பல இஸ்லாமியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பல இஸ்லாமியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனால் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ரயில்களில் பயணம் செய்த நபர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  

ttn

அதில், டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்கள் பயணம் செய்த ரயில்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் பயணம் செய்த ரயில்வே ஊழியர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. அதனால் கீழ்கண்ட ரயில்களில் பயணம் செய்தவர்கள் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அந்த ரயில்களின் விவரங்கள் புகைப்படமாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.