மார்கழி மாத கன்னி ராசி பலன்கள்

 

மார்கழி மாத கன்னி ராசி பலன்கள்

கன்னி ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

கன்னி ராசிக்கு 4ல் சூரியனும், சனியும் 6, 7-ல் செவ்வாயும்  2, 3-ல் சுக்கிரனும் 3, 4-ல் புதனும் 3-ல் குருவும் 11-ல் ராகுவும் 5-ல் கேதுவும் அமர்ந்துள்ளனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

kanni rasi palangal

கன்னி ராசிக்காரர்கள் பழைய வாகனத்தை மாற்றிவிட்டு  புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் மற்றும் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். 

kanni rasi palangal

வாழ்க்கைத்துணை மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.
அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும்.

உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும்.

மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்படச் சாத்தியமுள்ளது கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

kanni rasi palangal

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும்.

கன்னி லக்ன பலன்கள் : வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும.

உத்திரம் நட்சத்திரம் : குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரம்:  வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

சித்திரை நட்சத்திரம் : புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:  டிசம்பர் 18,19 ஜனவரி 14

kanni rashi palangal

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,7

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் மற்றும் வெள்ளி 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளி 

வழிபடவேண்டிய தெய்வம்: சிவன் மற்றும் முருகப்பெருமான்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.