மாரி செல்வராஜின் படைப்புக்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம்! எல்லை தாண்டும் பரியன்!

 

மாரி செல்வராஜின் படைப்புக்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம்! எல்லை தாண்டும் பரியன்!

பரியேறும் பெருமாள் திரைப்படம் ஹைனான் தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படம் ஹைனான் தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இதில்,கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். இவர்களுடன் யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

pari

சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் வசூல் மட்டும் விமர்சன ரீதியாகவ நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறையில் உள்ள பலரும் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். 

இந்நிலையில் சீனாவில் உள்ள ஹைனான் தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு பரியேறும் பெருமாள் தேர்வாகியுள்ளது. அதையொட்டி வரும் 30ம் தேதி 
இப்படம் திரையிடப்படவுள்ளதாக அப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக இப்படம் அமெரிக்கா, நார்வே போன்ற நாடுகளில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பட வாய்ப்புகாக படுக்கைக்கு அழைத்தார்: தெலுங்கு பட நடிகை பரபரப்பு பேட்டி!