மாரடைப்பைத் தடுக்கும் பாலக்கீரை மிளகு கூட்டு!
தேவையான அளவு உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத் தூள் சேர்க்க வேண்டும்.
பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது. தினமும் பாலக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
பாலக்கீரை -1கட்டு
சீரகம் -1டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -5
தேங்காய் -1/4மூடி
கா.மிளகாய் -2
புளி -சிறிதளவு
மிளகு -2டீஸ்பூன்
பூண்டு -3பல்
கறிவேப்பிலை -10 இலைகள்
கொத்தமல்லி -சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -சிறிதளவு
தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்
செய்முறை
பாலக்கீரையை நன்றாக அலசி சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்,காயந்த மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து, பாலக்கீரையைச் சேர்த்து வேகவிடுங்கள். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து விட வேண்டும். பாதி வெந்த நிலையில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை இத்துடன் சேர்க்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத் தூள் சேர்க்க வேண்டும். சூடான, சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை மிளகு கூட்டு தயார்.