மாமியாருடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா! புகைப்படம் உள்ளே!
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை: நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நம்பர்:1 நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் காதல் மலர்ந்தாக கூறப்படுகிறது.
அதையடுத்து படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் இருவரும் நாடு விட்டு நாடு சென்று விடுமுறையைக் கழித்து வருவதை வழக்கமாகச் செய்து வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்டு புகைப்படங்களையும் தவறாமல் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனின் குடும்பத்தைச் சமீபத்தில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில்,’அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகை வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில் காதல்,குடும்பம் என்ற ஹாஷ்டாக் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக விக்னேஷ் சிவன் குடும்பத்தோடு நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினி கொடுத்த எதிர்பாராத ட்விஸ்ட்! ரஜினி ரசிகர்களுக்கும் தான்…