’மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக மாறிய பாரதிராஜா…இனி ஒன்லி நடிப்புதானாம்…

 

’மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு வில்லனாக மாறிய பாரதிராஜா…இனி ஒன்லி நடிப்புதானாம்…

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இச்செய்தியை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி செய்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இச்செய்தியை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி செய்தார்.

maha

தற்போது ‘மஹா’படத்துக்காக கெஸ்ட் ரோலில் டூயட் பாடிக்கொண்டிருக்கும் நடிகர் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் சில காரணங்களால் ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

simbu

இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படத்தை இயக்கிவரும் வெங்கட் பிரபு முதன்முறையாக அரசியல் த்ரில்லர் கலந்த கதையை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

barathiraja

இந்நிலையில் படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிம்புவுக்கு வில்லனாகக் களமிறங்குகிறார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. அச்செய்து குறித்து விசாரிக்கையில்தான் கங்கை அமரன் ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் பிசியாக இருக்கும் செய்தியே வெளி உலகுக்குத் தெரிய வந்தது.

 தற்போது ’மாநாடு’ படத்தில் கங்கை அமரன் பரிசீலிக்கப்பட்ட  வில்லன் கேரக்டரில் பாரதிராஜா நடிக்கிறார் என்ற செய்தி பெரிய அளவில் பரவியதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தில் பாரதிராஜா நடிப்பது உண்மைதான். ஆனால் வில்லன் கதாபாத்திரம்  என்பதை இப்போதைக்கு வெளியே சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

simbu

இதற்கு முன்பு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த ஆயுத எழுத்து படத்தில் வில்லனாக பாரதிராஜா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் பாரதிராஜாவின் மென்மையான வில்லத்தனம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது கென்னடி கிளப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 2013ல் வெளிவந்த ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்துக்குப் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக படம் இயக்காமல் ஒன்லி  நடிப்பது என்று பாரதிராஜா கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.