மாநாடு சூப்பர் கதை நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பதிவு!
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மாநாடு படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மாநாடு படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் சார்ந்த காமெடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அர்ஜுன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இப்படத்தின் கதாநாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் பழம்பெரும் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் அவர். ஏற்கனவே இவர் ‘வான்’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திலும் கதாநாயகியாக நடித்த வருகிறார்.
Can’t wait to bring that amazing script to life! @vp_offl #STR @sureshkamatchi#maanaadu
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) March 29, 2019
இந்நிலையில் மாநாடு படத்தில் இணைந்துள்ளது பற்றி மகிழ்ச்சியாக கல்யாணி பிரியதர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார், அதில் ‘படப்பிடிப்பிற்காக என்னால் காக்க முடியவில்லை, அப்படி அருமையான கதை’ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த பலரும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் இப்படத்திற்காகச் சிம்பு புது கலைகளைக் கற்றுக்கொள்ள வெளிநாட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன் அழகை காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்