மாதவிடாய் வலியால் தவித்த டெல்லி இளம் பெண் கூட்டு பலாத்காரம்: 4 தமிழக வாலிபர்கள் கைது

 

மாதவிடாய் வலியால் தவித்த டெல்லி இளம் பெண் கூட்டு பலாத்காரம்: 4 தமிழக வாலிபர்கள் கைது

டெல்லியில் இருந்து வங்கி அதிகாரி பயிற்சிக்காக கும்பகோணம் வந்திருந்த பெண்ணை பாலியல் சித்ரவதை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணம்: டெல்லியில் இருந்து வங்கி அதிகாரி பயிற்சிக்காக கும்பகோணம் வந்திருந்த பெண்ணை பாலியல் சித்ரவதை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணத்தில் வங்கி உயர் அதிகாரி பயிற்சி பெறுவதற்காக டெல்லியில் இருந்து இளம்பெண் ஒருவர் ரயில் மூலம் வந்துள்ளார். ரயில் எழும்பூரில் இருந்து கிளம்பியவுடன், தான் நள்ளிரவு நேரத்தில் வந்துவிடுவதாகவும், அந்த நேரத்தில் தன்னை வந்து அழைத்துக் கொள்ளும்படியும் ஏற்கனவே கும்பகோணத்தில் பயிற்சி பெற்று வரும் தன் சக தோழிகளிடம் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

சொன்னது போல், இரவு 10.20 மணிக்கு கும்பகோணத்தை அடைந்துள்ளார். ஆனால், அந்த சமயத்தில் அங்கு நல்ல மழை பெய்து கொண்டிருந்ததால், ஓட்டல் முகவரியை கொடுத்து ஆட்டோ மூலம் வரும்படி தோழிகள் கூறியுள்ளனர். இவரும் அங்கிருந்த ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். ஆனால், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஓட்டலுக்கு செல்ல அரை மணி நேரமாக ஆட்டோ ஓட்டியதால், அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே அவர் கூச்சலிட தொடங்கியதால், அந்த பெண்ணை நடு ரோட்டில் இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

sexual abuse

அப்போது, தான் உங்களுக்கு உதவுவதாக ஆங்கிலத்தில் பேசியபடி தினேஷ் என்ற இளைஞர் அந்த பெண்ணை நெருங்கியுள்ளார். அந்த நேரத்தில் வேறு வழியின்றி, அந்த பெண் அவருடன் பைக்கில் ஏறி சென்றுள்ளார். அவர்களை பின் தொடர்ந்த வசந்த மற்றும் அவரது இரு நண்பர்கள் என 4 பேரும் மது அருந்தியது மட்டுமின்றி, கஞ்சா அருந்தி இருந்துள்ளனர்.

இந்த போதை தலைக்கு ஏறியதால், அந்த பெண்ணை யாரும் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று 4 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாதவிடாய் வலியால் துடித்த அவரை, 4 பேரும் மனசாட்சி இன்றி சித்ரவதை செய்துள்ளனர்.

abuse

இதெல்லாம் முடிந்து, அந்த பெண்ணை ஆடைகளை சரி செய்ய சொல்லி, நடந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் இங்கு படிக்க முடியாது என மிரட்டி ஆட்டோவில் ஏற்றி அனுப்பியுள்ளனர். அப்போது, ஆட்டோ ட்ரைவரிடம் ஒரு செல்ஃபோன் எண்ணைக் கொடுத்து இறக்கி விட்ட பின்னர் அழைக்கும்படி கூறியுள்ளனர். அந்த நம்பரை அப்பெண், மனப்பாடம் செய்துள்ளார். 

ஓட்டல் சென்றவுடன், ரத்த வெள்ளத்தில் வந்திருந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடம் நடந்தவற்றைக் கூறி கண்ணீர் வடித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை டெல்லியில் இருந்து உடனடியாக கிளம்பி வந்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் மனப்பாடம் செய்து வைத்திருந்த நம்பரை வைத்து, அந்த 4 காமுகர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், முதலில் ஆட்டோவில் ஏற்றி இறக்கிவிட்ட அந்த ஆட்டோ டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.