மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக முன்னாள் அமைச்சர் கைது! என்னைப்போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் – கதறும் மாணவி!! 

 

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக முன்னாள் அமைச்சர் கைது! என்னைப்போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் – கதறும் மாணவி!! 

உத்திரபிரதேசத்தில் இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார். 

பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்தாவை உடனடியாக கைது செய்யாவிட்டால், தான் தீக்குளித்து தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லை சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

swami

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது எஸ்.எஸ் சட்டக்கல்லூரி. இதன் நிறுவனத் தலைவராக இருக்கிறார் சுவாமி சின்மயானந்த். பிரபல அரசியல்வாதியான இவர் மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இதற்கிடையே சின்மயானந்த்தின் கல்லூரியில் சட்டம் படிக்கும் மாணவி ஒருவர், சின்மயானந்த் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாகவும், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் புகார் தெரிவித்தார். மேலும் இதனை வெளியில் சொன்னால் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார் என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி

ஆனால் காவல்துறையினர் இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்டனர். இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி ஷாஜகான்பூர் நீதிபதி முன் ஆஜராகி 4 மணி நேர வாக்குமூலத்தை அளித்தார். அந்த வாக்குமூலத்தில், தான் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு சின்மயானந்த் மிரட்டுவதாகவும், தன்னை ஒருவருடமாக பாலியல் வன்கொடுமை செய்துவருவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு சின்மயானந்த்தின் வழக்கை விசாரிக்க நியமனம் செய்யப்பட்டது. அவர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இன்று கைது செய்துள்ளனர்.