மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த எலெக்ட்ரீஷியன்: போக்சோ சட்டத்தில் கைது!

 

மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த எலெக்ட்ரீஷியன்: போக்சோ சட்டத்தில் கைது!

6 ஆம் வகுப்பு   படித்து வரும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்

சென்னை கொரட்டூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் எலெக்ட்ரீஷியன் சிவராமனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Sexual abuse

தமிழகத்தில் மட்டுமல்லாது எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு. கடந்த சில மாதங்களாக குழந்தைகளை கூட கற்பழிக்கும் அவலம் மிகுந்துக் கொண்டே வருகிறது. போதிய தண்டனை வழங்காததால் இன்னும் இந்த குற்றங்கள் நீடித்துக் கொண்டே வருகின்றன. 

Arrested

இந்நிலையில், சென்னை கொரட்டூரை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் சிவராமன், தனது வீட்டின் அருகே 6 ஆம் வகுப்பு   படித்து வரும் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை அம்பத்த்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி சிவராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.