மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு!

 

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி  ஓய்வு!

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பேராசிரியருக்குக் கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் ஒரு மாணவி கடந்த டிசம்பரில் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்திருந்தார். அதில் பேராசிரியர் கர்ண மகாராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினார். இந்த புகாரின் பேரில் பேராசிரியர் குறித்து  விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் மீதான புகாரில் உண்மை உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதில் ஆராய்ச்சி மாணவி அளித்த புகார் உறுதி செய்யப்பட்டதால் பேராசிரியர் கர்ண மகாராஜனுக்குக் கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.