மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: ரத்தம் கொட்ட அடித்து உதைத்த உறவினர்கள்: வீடியோ காட்சி!

 

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: ரத்தம் கொட்ட அடித்து உதைத்த உறவினர்கள்: வீடியோ காட்சி!

அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம்: அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம் அருகே உள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காகச் சிறப்பு வகுப்பு விடுமுறையில் நடைபெற்றுள்ளது. அப்போது கணிதம் பாடத்திற்கான சிறப்பு வகுப்பு முடிந்த உடன்  மாணவியை ஆசிரியர் கண்ணன் தனியாக அழைத்து வந்து தலைமையாசிரியர் அறையில் வைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.அதனைக் கண்டு பயந்த மாணவி கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

இது தொடர்பாக மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்த போது ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது வகுப்பறையில் இருந்த ஆசிரியர் கண்ணன் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த ஆசிரியருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.