மாணவர் போராட்டத்துக்கு தீபிகா படுகோண் ஆதரவு தெரிவித்த ரகசியம்! பிஜேபி எம்பி சொல்கிறார்!

 

மாணவர் போராட்டத்துக்கு தீபிகா படுகோண் ஆதரவு தெரிவித்த ரகசியம்! பிஜேபி எம்பி சொல்கிறார்!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்துக்குள்,முகமூடி அணிந்த குண்டர்கள் நுழைந்து மாணவர்களை தாக்கி ஒருவாரம் ஆகிறது இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.இந்து ரக்‌ஷா தள் என்கிற அமைப்பு பொருப்பேற்ற பிறகும் போலீஸ் விசாரித்துக்கொண்டு இருக்கிறது. 

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்துக்குள்,முகமூடி அணிந்த குண்டர்கள் நுழைந்து மாணவர்களை தாக்கி ஒருவாரம் ஆகிறது இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.இந்து ரக்‌ஷா தள் என்கிற அமைப்பு பொருப்பேற்ற பிறகும் போலீஸ் விசாரித்துக்கொண்டு இருக்கிறது. 

jnu

ஆனால்,புத்திசாலித்தனத்திற்கு புகழ் பெற்ற பிஜேபியின் மந்திரிகளில் ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்தியது டெல்லியை ஆளும் அம்ஆத்மி கட்சியினர்தான். கேஜ்ரிவால்தான் இதற்குக் காரணம் என்று சொல்லி அதிர்ச்சி அளித்தார்.

rakeweshg

இன்று பிஜேபியின் ராஜ்யசபை உறுப்பினரான ராகேஷ் சின்ஹா ஒரு திடுக்கிடும் சர்வதேச சதியைப் பற்றிய செய்தியை வெளியிட்டு இருக்கிறார். திரு சின்ஹா சாதாரண ஆசாமி அல்ல,அவர் படித்த பேராசிரியர்.டெல்லியில் உள்ள வலதுசாரி சிந்தனையாளர் பேரவை ஒன்றின் ஸ்தாபகர்.பல நூல்களை எழுதி இருக்கிறார். அவற்றில் மிகவும் முக்கியமானது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஸ்தாபகரான ஹெட்கேவாரின் வாழ்க்கை வரலாறு. 

deepika

இந்தியாவில் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ‘கான்’கள் எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க தீபிகா படுகோனே சபர்மதி முனைக்கு வந்து மாணவர்களைச் சந்தித்து வாழ்த்தி,நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று சொன்னதை இந்தியாவே வியந்து பாராட்டிக் கொண்டு இருக்கும் நேரத்தில் இந்த சந்திப்பின் பின்னால் இருக்கும் காரணத்தை கண்டுபிடிடித்து வெளியிட்டு இருக்கிறார்

dawood

திரு ராகேஷ் சின்ஹா எம்.பி. பம்பாயில் குண்டுவைத்து விட்டு இன்னும் பாகிஸ்தானில் வாழ்ந்துகொண்டிருக்கும் தாவூத் இப்ராகிம் சொல்லித்தான், நடிகை தீபிகா படுகோனே மாணவர்களைச் சந்திக்க வந்தாராம்.எதுக்கு ரா,என்.ஐ.ஏ எல்லாம் வெட்டியாயாய்.அவற்றையும் தனியாருக்கு வித்துடுங்க,இந்த ஒன்மேன் உளவுத்துறை போதாதா?.