மாட்டை மோதிய பஸ் டிரைவருக்கு மரண அடி ! பஸ்ஸுக்குள்ளேயே ரவுண்டு கட்டி அடித்த மக்கள் !

 

மாட்டை மோதிய பஸ் டிரைவருக்கு மரண அடி ! பஸ்ஸுக்குள்ளேயே ரவுண்டு கட்டி அடித்த மக்கள் !

சாஹிர் ஓட்டி வந்த பேருந்தை கிராம மக்கள் வழிமறித்தனர். பின்னர் கும்பலாக பேருந்திற்குள் சென்று சாஹிரை அடித்து துவைத்து விட்டு வெளியில் இறங்கினர்.

மத்திய பிரதேசம் அலிபுரா பகுதியை சேர்ந்த சாஹிர் என்பவர் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு பேருந்து ஓட்டிச் சென்றபோது சாலையின் நடுவில் படுத்திருந்த மாட்டின் கால்கள் மீது ஏற்றிவிட்டு சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் மாடு படுத்திருந்தது அவருக்கு சரியாக தெரியவில்லை. இதனால் ஆத்திமடைந்த மாட்டிற்கு உரிமையாளர் மற்றும் கிராம மக்கள் மறுநாள் அதே சாலையில் வந்து பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது சாஹிர் ஓட்டி வந்த பேருந்தை கிராம மக்கள் வழிமறித்தனர். பின்னர் கும்பலாக பேருந்திற்குள் சென்று சாஹிரை அடித்து துவைத்து விட்டு வெளியில் இறங்கினர். பேருந்தில் இருந்தவர்களோ அவரை காப்பாற்றுவதற்கு பயந்து அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தனர்.சிலர் வீடியோ எடுத்தனர். சிலர் செல்பி எடுத்துக் கெண்டனர் வழக்கம்போல.

பொதுமக்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சாஹிர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் பேருந்து ஓட்டுநரை தாக்கியதற்காக சக தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்ததற்கான தகவல்கள் ஏதும் நமக்கு  கிடைக்கப் பெறவில்லை. இதுவே நம்மூராக இருந்தால் சென்னையில் விழுந்த அடிக்கு கன்னியாகுமரி டிப்போவில் பேருந்து புறப்படாமல் ஸ்டிரைக் செய்திருக்கும்.